skip to main | skip to sidebar
நிலா
RSS


மனசினுள் சுகமாய் உறங்கும்
என் காதலை
எழுப்பத் தயங்கினேன்
எழுந்ததும் வலிக்கொடுத்துவிடுமோ
என்ற அச்சத்தில்..

உனைக் கண்ட அடுத்த நொடி
விழித்து விட்டது..

விழியோரத்தில் நீர் கசிகிறது
உன் நினைவுகளை சுமந்தபடி..
சுகமாய்த் தோன்றிய நினைவுகள் கூட
இன்று ரணமாய்..








இவை உனக்கானவை
என்ற பிரக்ஞை இல்லாமல் படிப்பாய்
என் கவிதைகளை ..
என் நெஞ்சத்தின் காதலை
காற்றிடம் அனுப்புகிறேன்
காற்று உன் வாசல் தெரியாமல் திரும்பி வருகிறது ..
என் நிலவும் என்னைக் கைவிட்டுவிட்டது..

இனி எப்படி சொல்வேன் என் காதலை உன்னிடம்..






புதிதாய்ப் பிறந்த உணர்வு
உன்னைப் பார்த்தக்கணத்தில்.. 
உனக்கும் இருக்குமா 
அதே உணர்வு?
இருந்தால் என்ன செய்வாய் நீ..
இல்லாவிட்டால் என்ன செய்வேன் நான்..

விடை காண முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன்
உன்னிடம் தோற்று விடக்கூடாது என பிரார்த்தித்துக்கொண்டு..







இழக்கும் வரை
தெரியாத அருமை
இழந்தபின்னரே புரியும் ..
வானில் தினமும் ஒளிவீசிக்கொண்டிருந்தால்
நிலவிற்கு இங்கே மதிப்பில்லை
நினைக்கும் நேரம் மழை பொழிந்தால்
நீரின் அருமை புரிந்திருக்கப் போவதில்லை ..

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும்
சுவாரஸ்யமானது
அதை நாம் உணர்ந்து வாழும் வரை..






வாழ்க்கை மிக அற்புதமானது
ஆனால் சிலரால் மட்டுமே
அதை அர்த்தப்படுத்தவும் முடிகிறது
என் நண்பர்கள் போல.. 






உன்னை மறக்கத் துடிக்கும்
என் மனது
அடுத்த நொடி
உன்னை மட்டுமே
நினைக்கத் துடிக்கிறது..





சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 3



தூரத்து பனிமலைகள்
மெல்லிய குளிர்
சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்
அழகிய மணாலி!!
இங்கிருந்து டாக்சியில்
சொர்க்கத்தின் வாசலை நோக்கி தொடங்கியது
ஒரு இனிமையான பயணம்..

வழியில் கண்ட அற்புதங்கள்
சொல்ல வார்த்தைகள் இல்லை..

வாகனங்களுடன் போட்டி போடும் நதி
நொடிக்கொருமுறை நிறம் மாறும் வானம்
ஊசி இலை மரங்கள்
இவற்றை கண்டு ரசித்தபடி
நாங்கள் போய் சேர்ந்தது
கீய்லாங் எனும் சிறு நகரம்..
அங்கு ஒரு சிறு விடுதியில்
கழிந்தது இரவு..

அதிகாலை துவங்கியது பயணம்
எங்கெங்கு காணினும் பனி மலைகள்
இளஞ்சூரியனின் ஒளியால்
மேலும் அழகூட்டப்பட்டு ..
காற்றால் செதுக்கப்பட்ட துளை
உறைந்த நீர்வீழ்ச்சி
அழகிய நீலத்தில் ஒரு நதி
உயரத்தில் ஒரு பரந்த சமவெளி
அதன் நடுவில் ஒரு உப்புநீர் ஏரி..

இயற்கை வஞ்சனையின்றி அழகை வாரி இறைத்திருந்தது ..
சூடான ரொட்டியுடன் வெண்ணையும் உப்பும் கலந்த ஒரு வகை தேநீர்
அந்த இடத்துக்கு மேலும் அழகு சேர்த்தது..

அழகுடன் 
ஆபத்தும் நிறைந்த சாலை
இராணுவத்தின் சோதனைச் சாவடி
இவற்றை கடந்து
நாங்கள் லேஹ்வை அடைந்த போது மணி 9..

முன்பதிவு செய்திருந்த
விடுதியை அடைந்தபோது
காத்திருந்தது அந்த அதிர்ச்சி..





Friends


Some people
can make your world wonderful
can make you feel on top of the world..
While some people
can make you feel horrible..
Life's secret lies in
finding the right people at the right time..
And here I am
with the best people
I can ever find in my life..

I can't imagine a Life
without all my friends
without all the fun
without all the care..

And we rock always!






சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 2

Trip to Leh

ஆரவாரமாய் வரவேற்றது
தலைநகரம்..
ஆம் எம் பயணத்தின்
முதல் நிறுத்தம்
புது தில்லி..
தலை நகருக்கே உரிய பரபரப்புடன்..

இங்கிருந்து பேருந்தில் 
தொடங்கியது
எங்கள் அடுத்தக்கட்ட பயணம்
மணாலியைத் தேடி..

தங்களின் இருப்பிடம் தேடி விரையும் 
மக்கள் கூட்டத்தின் நடுவில்
மெல்ல நகர்ந்தது எங்கள் பேருந்து..

அரியானா மாகாணத்தின் 
ஏதோ ஒரு மூலையில் 
ஒரு சிறு உணவகத்தில் 
உண்ட இரவு உணவு..
ஒரு பிரியாணியை
நால்வரும் பகிர்ந்துண்டது 
வாழ்வின் மிக இனிமையான 
தருணங்களில் ஒன்றாய் 
இன்றும் மனதில்..





சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 1


இதோ துவங்கிவிட்டது
என் முதல் தொலைதூரப்பயணம்
என் இனிய தோழிகளுடன்..
முன் இருந்த 
சிறு தயக்கம்
சிறு பயம்
அனைத்தையும் தொலைத்து 
மனதில்
மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் மட்டுமே சுமந்து 
தொடங்கியது அந்த இனிய பயணம்
சொர்க்கத்தின் வாசலைத் தேடி..





நட்பு


உன்னை பார்த்த நொடி 
நினைவில்லை.. 
உன்னோடு பேசிய முதல் வார்த்தை 
கூட நினைவில்லை..
பல நூற்றாண்டுகளாய் 
உன் அன்பிலும் அக்கறையிலும் 
திளைத்ததொரு பரவசம் 
என் உள்ளமெங்கும்..

நான் சிரிக்கும் போது சிரித்து  
நான் அழும்போது ஆறுதல் தரும் 
என் தோழியே 
உன்னருகில் 
நட்பின் அருமையை 
முழுதாய் உணர்கிறேன்..

என் கண்ணின் 
கருவிழியாய்..
என் இதயத்தின் 
உயிர்த்துடிப்பாய்..
உன் நட்பு..
என் வாழ்க்கை முழுதும் தொடரும் 
வரம் வேண்டும்..






ஒரு காலத்தில் 
விடியா இரவுகளை சபித்தவள்
இன்று
முடியா பகலை 
சபிக்கிறேன்
நீ தோன்றும் கனவுகளுக்காக..









நடு இரவில் விழிக்கிறேன் 
ஜன்னலில் தோன்றும் நிலா.. 
நிலவில் கறைகளை காணாமல் திகைக்கிறேன் 
அங்கே தெரிவது உன் முகம் அன்றோ 
அதில் ஏது கறைகள்!!





நினைவுகள்


மகிழ்ச்சி தளிர்த்திடச் செய்யும் சில
சிந்தை மயங்க வைக்கும் சில
உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில் ஓங்கியடித்திடும் சில
ஊனை வருத்திடும் சில
ஊழிக் காற்றை கதிகலங்க வைக்கும் சில..
தித்திக்கும் செந்தேனாய் 
கலங்கரை விளக்காய்
தொண்டையிலே சிக்கிய மீன் முள்ளாய்
மனதை வருடும் தென்றலாய் சில..

நினைவுகளால் நிறைந்திருக்கும் வானத்தில்
சிறு பறவையாய் நான்..






இரவின் தனிமையில் 
மெல்லிய குளிரில் 
மேகக் கூட்டத்தின் நடுவில்
என் நிலா.. 

குட்டையாய் 
தேங்கியிருந்த நீர் 
நேற்று பெய்த மழையின்
மிச்சமாய்.. 

அந்த நிலவின் ஒளியில்
தேங்கியிருந்த நீரில்
உன் முகம்
சற்றே கலங்கலாய்..
என் மனதில் 
எழும் சலனத்தைப் போல்..








உன் நினைவுகளின் 
சுமை தாங்க முடியாமல்
விழுகிறது என் இதயம் 
மீண்டும் உன் காதலில்..






புகைப்படத்தில் மட்டுமே 
புன்னகைத்து பார்த்திருக்கும் உன்னை 
நேரில் காணும் நாளுக்காய்
காத்திருக்கிறேன்..






ஒரு நொடியில் கொட்டித்தீர்க்கும் 
மழையை போல் 
ஒரு நொடியில் என் மனதை
பறித்துவிட்டாய் 
பெயர் கூட தெரியாமல்..
உன் மீதான காதலை 
கவிதையாய் மொழிப்பெயர்க்கிறேன் 
உன்னிடம் சேர்க்கும் வழி தெரியாமல்..







மழையின்றி துவளும் கொடி போல்
துவண்டிருக்கிறேன் 
எப்போது உன் பார்வை எனும் நீர்ப்பாய்ச்சி 
என்னை மலரச்செய்வாய்?






நான் 
சேமித்து வைத்திருக்கும் 
காதல் முழுவதையும் 
உன்னிடம் 
சேர்க்கும் நொடிக்காய் 
காத்திருக்கிறேன்..






எப்போது என் மனதில் நுழைந்தாய் 
நானே அறியாமல்..

உன் பெயர் கூட தெரியாமல் 
உன் முகம் பார்த்து 
மயங்கினேன்.. 
உன் அழகினால் அல்ல 
உன் கண்கள் தரும் சுகத்தினால்.. 






இன்று 
கவிதையே தோன்றவில்லை
என்று நினைத்து கொண்டிருந்த வேளையில் 
கண் முன் 
உன் முகம்..
உனை விட சிறந்த கவிதை 
இந்த உலகில் 
ஏதேனும் உண்டா என்ன?? 






உன்னுடைய சுகத்தை விட 
உன் வலியில் 
என் காதலை 
முழுதாய் உணர்கிறேன்.. 
உன்னுடன் சேர துடிக்கும்
ஒவ்வொரு நொடியும் ஒரு ரணமாய்.. 
உன் ஒரு வார்த்தைக்கு 
இன்னும் எத்தனை நாள் தவமிருப்பது??






சிறு பட்டாம்பூச்சியாய் 
பறந்த என் மனதை
என்ன செய்தாய்
உன் 
காலைச் சுற்றும் நாய்க் குட்டியாய் 
மாறுவதற்கு??








மெல்லிய குளிர் காற்றில்
விண்மீன்களின் கூட்டத்தின் கீழ்
நிலவை ரசித்தபடியே
இரவை கழிக்கும்
வரம் வேண்டும்
பட்டுக்கருநீல புடவை
பதித்த நல் வைரம்
என்று ரசித்த

பாரதியின் கண்களுடன்..






என்னுடன் கண்ணாமூச்சி விளையாட
அப்படி என்ன விருப்பமோ..
வருவாய் என்று நம்பி இருந்தேன்..
அன்று போல் இன்றும்
எங்கே ஓடி ஒளிந்தாய்
என் அருமை மழைத்துளியே??






மழைத்துளி
நிலவொளி
இரவின் தனிமை
நதியின் ஓசை
குயிலின் கீதம்
மலைச்சாரல்
தோழியின் தோள்கள்
கண்ணீரில் நனையும் தலையணை
இவை அனைத்தும் தரும் சுகத்தை
உன் காதலால் கூட தர முடியாது






என் வலிகளை சுகங்களாகவும்
என் துன்பத்தை இன்பமாக்கவும்
என் கண்ணீரை புன்னகையாக்கவும் 
என் முட்களை பூக்களாக்கவும்
உன்னால் மட்டுமே முடியும் 








காதலிடம்
என் முகவரியை தந்து விட்டு
உன் முகவரியை
மறைப்பதேன்..
மறைப்பதும்
மறப்பதும்
கை வந்த கலையோ??







உன்னாலே எனக்குள்
உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா..
எங்கேயோ இருந்து
நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழச் சொல்லுதடா..

யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் முடியும்





A perfect dream


Cool Wind
Music of Raindrops falling on Water
Sweet smell raising from the Mud 
Romantic song
And YOU!!!






கனவில் மட்டும்
காதலை சொல்லும்
கள்வனே
என்றேனும்
நனவில் சொல்வாயா?

உன் கண்களில் காதலை கண்ட அந்த ஓர் நொடி
அது கனவா நனவா
இன்று வரை புரியவில்லை
ஏனெனில்
உன்னால் மட்டுமே
ஒரு கண்ணில் காதலையும்
மறு கண்ணில் வெறுமையையும்
காட்ட முடியும்!!! 


  






உன்
கையணைப்பின் சுகத்தில்
மூழ்கி இருந்ததொரு நிமிடத்தில் தான்
என் மனதின் காதலை
முழுதாய் உணர்ந்தேன்..
உணர்ந்த நொடி
உனக்காய் மீண்டும் பிறந்தேன்..






என் மனம் வாடியபோதெல்லாம்
உற்ற தோழனாய்
இருந்த நீ
என் காதல் கருகும்போது
எங்கே போனாய்?






என் மௌனங்களை
கவிதையாய்
மொழிபெயர்க்கிறேன்..
அப்போதேனும்
என் காதல்
உனக்கு புரியுமா?






கொடுத்துப் பெறுவதில்
இத்தனை சுகமா..
மழைத் துளி தந்து
மண் வாசம் பெற்றது
குளிர்காற்று!






மழைக்கால இரவில்
நிலவொளியில்
உன் கை அணைப்பில்
என் காதலை
சொல்லத்தான் ஆசை...
ஆனால்...

உன்னை விட
சொல்லாத காதலின்
சுகத்தையும்
வேதனையையும்
மேலும் காதலிக்கிறேன்...

உன் பார்வைகளுக்காய்
உன் வார்த்தைகளுக்காய்
உன் ஸ்பரிசங்களுக்காய்
ஏங்கிய நாட்கள்..
அதன் நினைவுகள்
தரும் சுகங்களை விடவா
நீ சுகம் தந்து விட போகிறாய்..







ஆயிரம் கதைகள்
சொல்ல துடிக்கும் நாவை
ஒரு நொடியில்
மௌனமாக்கிவிடுகிறாய்
உன் பார்வையில்..






நான்..
உன்னை
உனக்காகவே
நேசிக்கிறேன் ..

உன்னிடம்
பகரமுடியாமல்
தயக்கமெனும்
பனிப் போர்வைக்குள்
தத்தளிக்கிறேன்!

இந்த
மொழி புரியா
மௌனக் கவிதையின்
பூரணத்துவத்தை
படிக்க வார்த்தையின்றி
தவிக்கிறேன்!

உன்
நிஜத்தை நேசித்து
உனக்காகவே
காத்திருக்கிறேன்!

இனி
நீயின்றி நான்
உயிர்க் கூடின்றி
ஒலிச் சிறகை மட்டுமே
விரிக்கும்
பாடற்பறவை!





Just a Fantasy??


I had a dream
with me in your arms
in a chilly night
under moon light!

May be just a fantasy
Sweet and unbelievable
Never-ending and just amazing

But no matter what
My love for you will stay
And never fade away!





Vairamuthu's amazing lines


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே 
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான் 
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி 

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு  சில  நிமிடம்
கட்டி  அணைத்தபடி  கண்ணீரில்  சில நிமிடம்
இலக்கணமே  பாராமல்
எல்லா  இடங்களிலும்  முத்தங்கள்  விதைத்த  மோகத்தில்  சில நிமிடம்



எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா  அது  பகல  அதை  பற்றி  அறியவில்லை
யார்  தொடங்க ? யார் முடிக்க ? ஒரு  வழியும்  தோன்றவில்லை
இருவருமே  தொடங்கிவிட்டோம்  இது  வரைக்கும்  கேள்வி  இல்லை 

அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய் 

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி 







அற்புதமான காதலை 
மட்டுமல்ல 
அதை உன்னிடம் 
சொல்ல முடியாத 
அதி அற்புதமான 
மௌனத்தையும் 
நீதான் எனக்கு 
தந்தாய்.





And I hate you too..



I was fine before you
walked into my life
I hate your hair, your clothes and your style
I hate your humor, your voice and your smile
I hate everything that belongs to you Because they just remind me of you
I hate you when you don’t even care to talk at me
I hate you when you ignore the stupid me
I hate to see you because the more I see you, the more I think of you
I hate you when I wake up in the morning Because you are the first thing on my mind
I hate you when I go to bed at night Because you are always in my dreams
I hate you when I’m feeling lonely
I hate you when you’re feeling sad Because you never share with me
I hate you when I try to get close to you Because you never understand me
I hate you because no matter how hard I try I cannot get you out of my mind
I hate you because the truth is that I can’t hate you any more
I hate you because I never hate you at all
I hate you because you don’t know how much I love you





I miss you :(



Today I thought about you
and I realized something.
I felt like a part of me was missing,
and I discovered it was you.
We’re so comfortable around each other,
and we don’t have to think about
what we say, or how we say it.
I missed that today. I missed you.
I thought of the times when we
kicked back, shared our dreams, our hopes,
and plans ~ and you really listened.
I missed that today. I missed you.
Remembering your smile,
and how you made me smile ~
created a smile.
I love how being just who we are is enough.
I missed that today. I missed you.
And so, as you go through your busy day,
and I go through mine,
please know that you often cross my mind,
and I missed you today. I missed you.
 





Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ▼  2011 (44)
      • ▼  August (5)
        • மனசினுள் சுகமாய் உறங்கும் என் காதலை எழுப்பத் த...
        • இவை உனக்கானவை என்ற பிரக்ஞை இல்லாமல் படிப்பாய் ...
        • புதிதாய்ப் பிறந்த உணர்வுஉன்னைப் பார்த்தக்கணத்தில்....
        • இழக்கும் வரை தெரியாத அருமை இழந்தபின்னரே புரியு...
        • வாழ்க்கை மிக அற்புதமானது ஆனால் சிலரால் மட்டுமே ...
      • ►  July (3)
        • உன்னை மறக்கத் துடிக்கும் என் மனது அடுத்த நொடி ...
        • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 3
        • Friends
      • ►  June (7)
        • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 2
        • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 1
        • நட்பு
        • ஒரு காலத்தில் விடியா இரவுகளை சபித்தவள்இன்றுமுடியா ...
        • நடு இரவில் விழிக்கிறேன் ஜன்னலில் தோன்றும் நிலா....
        • நினைவுகள்
        • இரவின் தனிமையில் மெல்லிய குளிரில் மேகக் கூட்டத்தின...
      • ►  May (6)
        • உன் நினைவுகளின் சுமை தாங்க முடியாமல்விழுகிறது என் ...
        • புகைப்படத்தில் மட்டுமே புன்னகைத்து பார்த்திருக்கும...
        • ஒரு நொடியில் கொட்டித்தீர்க்கும் மழையை போல் ஒரு நொட...
        • மழையின்றி துவளும் கொடி போல் துவண்டிருக்கிறேன் எப்...
        • நான் சேமித்து வைத்திருக்கும் காதல் முழுவதையும் உன்...
        • எப்போது என் மனதில் நுழைந்தாய் நானே அறியாமல்.. உன் ...
      • ►  April (9)
        • இன்று கவிதையே தோன்றவில்லைஎன்று நினைத்து கொண்டிருந்...
        • உன்னுடைய சுகத்தை விட உன் வலியில் என் காதலை முழுதாய...
        • சிறு பட்டாம்பூச்சியாய் பறந்த என் மனதைஎன்ன செய்தாய்...
        • மெல்லிய குளிர் காற்றில் விண்மீன்களின் கூட்டத்...
        • என்னுடன் கண்ணாமூச்சி விளையாட அப்படி என்ன விருப்...
        • மழைத்துளி நிலவொளி இரவின் தனிமை நதியின் ஓசை குய...
        • என் வலிகளை சுகங்களாகவும்என் துன்பத்தை இன்பமாக்கவும...
        • காதலிடம் என் முகவரியை தந்து விட்டு உன் முகவரிய...
        • உன்னாலே எனக்குள் உருவான உலகம் பூகம்பம் இன்றி ச...
      • ►  March (14)
        • A perfect dream
        • கனவில் மட்டும் காதலை சொல்லும் கள்வனே என்றேனும...
        • உன் கையணைப்பின் சுகத்தில் மூழ்கி இருந்ததொரு நி...
        • என் மனம் வாடியபோதெல்லாம் உற்ற தோழனாய் இருந்த நீ...
        • என் மௌனங்களை கவிதையாய் மொழிபெயர்க்கிறேன்.. அப...
        • கொடுத்துப் பெறுவதில் இத்தனை சுகமா.. மழைத் துளி...
        • மழைக்கால இரவில் நிலவொளியில் உன் கை அணைப்பில் ...
        • ஆயிரம் கதைகள் சொல்ல துடிக்கும் நாவை ஒரு நொடியி...
        • நான்.. உன்னை உனக்காகவே நேசிக்கிறேன் .. உன்...
        • Just a Fantasy??
        • Vairamuthu's amazing lines
        • அற்புதமான காதலை மட்டுமல்ல அதை உன்னிடம் சொல்ல முடிய...
        • And I hate you too..
        • I miss you :(
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft