skip to main | skip to sidebar
நிலா
RSS

சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 3



தூரத்து பனிமலைகள்
மெல்லிய குளிர்
சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்
அழகிய மணாலி!!
இங்கிருந்து டாக்சியில்
சொர்க்கத்தின் வாசலை நோக்கி தொடங்கியது
ஒரு இனிமையான பயணம்..

வழியில் கண்ட அற்புதங்கள்
சொல்ல வார்த்தைகள் இல்லை..

வாகனங்களுடன் போட்டி போடும் நதி
நொடிக்கொருமுறை நிறம் மாறும் வானம்
ஊசி இலை மரங்கள்
இவற்றை கண்டு ரசித்தபடி
நாங்கள் போய் சேர்ந்தது
கீய்லாங் எனும் சிறு நகரம்..
அங்கு ஒரு சிறு விடுதியில்
கழிந்தது இரவு..

அதிகாலை துவங்கியது பயணம்
எங்கெங்கு காணினும் பனி மலைகள்
இளஞ்சூரியனின் ஒளியால்
மேலும் அழகூட்டப்பட்டு ..
காற்றால் செதுக்கப்பட்ட துளை
உறைந்த நீர்வீழ்ச்சி
அழகிய நீலத்தில் ஒரு நதி
உயரத்தில் ஒரு பரந்த சமவெளி
அதன் நடுவில் ஒரு உப்புநீர் ஏரி..

இயற்கை வஞ்சனையின்றி அழகை வாரி இறைத்திருந்தது ..
சூடான ரொட்டியுடன் வெண்ணையும் உப்பும் கலந்த ஒரு வகை தேநீர்
அந்த இடத்துக்கு மேலும் அழகு சேர்த்தது..

அழகுடன் 
ஆபத்தும் நிறைந்த சாலை
இராணுவத்தின் சோதனைச் சாவடி
இவற்றை கடந்து
நாங்கள் லேஹ்வை அடைந்த போது மணி 9..

முன்பதிவு செய்திருந்த
விடுதியை அடைந்தபோது
காத்திருந்தது அந்த அதிர்ச்சி..





Newer Post Older Post Home

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ▼  2011 (44)
      • ►  August (5)
      • ▼  July (3)
        • உன்னை மறக்கத் துடிக்கும் என் மனது அடுத்த நொடி ...
        • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம் - பகுதி 3
        • Friends
      • ►  June (7)
      • ►  May (6)
      • ►  April (9)
      • ►  March (14)
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft